பயணிகளின் கவனத்திற்கு… ஜன.31 வரை இந்த ரயில்கள் ரத்து!

பராமரிப்பு பணி காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை சில ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவை கொரோனா 3வது அலை சுழற்றி எடுத்துக்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஒமைக்ரான் பரவல் வேறு தீவிரமடைந்து வருவதால், தமிழ்நாட்டில் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்தான பேருந்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் ரயில் மூலம் பயணித்து வருகின்றனர். இந்த சூழலில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • இன்று முதல் திருப்பதி-காட்பாடி பயணிகள் சிறப்பு ரயில் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சேவை திருப்பதியில் இருந்து மாலை 7.25 மணிக்கு புறப்படும்.
  • மறு மார்க்கமாக காட்பாடி-திருப்பதி பயணிகள் சிறப்பு ரயில் வண்டி எண் 07662, காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் இன்று முதல் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.
  • அதே போல் சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் வண்டி எண் 17238, சென்ட்டிரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்பட உள்ளது.
  • பித்திரகுண்டா-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் வண்டி எண்17237, பித்திரகுண்டாவில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில்சேவையும் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை சில ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *