‘முட்டாள்’… அண்ணாமலையை வெளுத்து வாங்கிய ஆம் ஆத்மி… காரணம் என்ன?

சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் ஆம்ஆத்மிகட்சி திமுகவின் “B”டீமாக செயல்பட்டு வருவதாகவும், ஆம்ஆத்மி வசீகரன் தன்னை நிலை நிறுத்தி கொள்ள பாஜகவை பற்றி விமர்சனம் செய்வதாகவும், ஆம்ஆத்மி வசீகரனிடம் “ஆம்” இல்லை “ஆத்மி”யும் இல்லை எனத் தெரிவித்தார். அதோடு விடாமல் ஆம்ஆத்மிகட்சி மற்ற மாநிலங்களில் செய்யும் பணிகளை தமிழ்நாட்டில் பாஜக செய்வதாக சொன்னார். இவ்வளவும் சொல்லிவிட்டு வசீகரன் யார் என்று தெரியாது என்று கூறினார்.

இதற்கு தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் அணையத்திற்கு அனுப்பவேண்டியே தேர்தல் முறைகேடு புகார் கடிதத்தை மத்திய தேர்தல் அணையத்திற்கு அனுப்பி இருக்கிறார் இந்த முட்டாள் பிஜேபி தலைவர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தான் அங்கே தான் நீங்கள் புகார் கொடுக்க முடியும் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு சம்பந்தம் இல்லை என்று மத்திய தேர்தல் ஆணையம் பதில் விளக்கம் அவருக்கு தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெறவே முடியாது என்று பேசி வந்தார் இந்த காமிடியன் பின்னர் மோடி வாபஸ் பெற்றது உலகறியும்,

தான் ஒரு கர்நாடகாரர் என்று கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய போது பேசியது அவரது சந்தர்ப்பவாத புத்தியை வெளிக்காட்டியது.தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி திமுகவின் “B”டீமாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார் இது மேலும் அவரது அரசியல் அறிவின்மையையே காட்டுகிறது.

இந்தியாவில் ஆம்ஆத்மிகட்சியானது காங்கிரஸ் பாஜகவிற்கு மாற்றாக உருவெடுத்து வருகிறது, எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனி பெரும்பான்மையுடன் டெல்லியில் தொடர்ந்து வென்று வருகிறது. மார்ச் 10 பஞ்சாபிலும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது, கோவா உத்தற்காண்ட், உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் ஆம்ஆத்மி தன் தடம் பதித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

காங்கிரஸ், பிஜேபியை வீழ்த்தும் “A டீம்” தான் ஆம்ஆத்மி, தமிழ்நாடில் யாருக்கும் “B டீமாக” செயல்பட வேண்டிய அவசியத்தில் ஆம்ஆத்மி இல்லை.
பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் ஆம்ஆத்மி திமுக வின் “B” டீம் என்று சொல்லி சமாளித்து இருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் “ஆம்” இல்லை “ஆத்மி” என்று சொல்லி இருக்கிறார். தமிழிநாட்டில் பாஜக பல தேர்தல்களில் தொடர்ந்து “0” வாக்குகள் பெற்று வந்ததை வருவதை மறந்து பேசுகிறார் இந்த திரு.அண்ணாமலை.

ஆம்ஆத்மி வசீகரன் அண்ணாமலை பற்றி பேசி தன்னை நிலை நிறுத்தி கொள்ள முயற்சிப்பதாக கூறியுள்ளார். திரு.அண்ணாமலையை மக்கள் ஆட்டுக்குட்டி எனவும் சேத்து குட்டி எனவும் பேசுகின்றனர் ஒரு மனிதனாகவே அவரை யாரும் பார்க்கவில்லை. அண்ணாமலை பற்றி நாம் பேசினால் மக்கள் அருவருப்பு அடைகின்றனர்.

இந்நிலையில் இவரை பேசி ஆம்ஆத்மியை தமிழ்நாட்டில் வளர்க்க வேண்டியே நிலையில் தமிழக ஆம்ஆத்மி இல்லை டெல்லியில் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் செய்துள்ள சாதனைகளை தமிழக மக்களிடம் சரியாக சொன்னாலே போதும் ஆம்ஆத்மி தானாக வளரும். மற்ற மாநிலங்களில் ஆம்ஆத்மி செய்யும் பணிகளை தமிழ்நாட்டில் பாஜக செய்வதாக பொய் சொல்கிறார். ஆம்ஆத்மி மக்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து தேர்தலில் எவ்வித சிரமமுமின்றி வெற்றி பெறுபவர்கள். பாஜக போல் மதவெறி அரசியல் செய்பவர்கள் இல்லை ஆம்ஆத்மி.

ஆம்ஆத்மி செய்யும் மக்கள் நல பணிகளை பாஜகவால் செய்யவும் முடியாது செய்தததும் இல்லை. ஆம்ஆத்மிகட்சி இந்தியாவில் மக்கள் எதிர்பார்க்கும் தவிர்க்க முடியாத நேர்மையான அரசியல் கட்சியாக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது இதை ஜீரணித்து கொள்ள முடியாத அரசியல் அறிவிலியாக திரு.அண்ணாமலை இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டிலும் மதவெறி, ஊழல் அரசியல் செய்பவர்களை ஆம்ஆத்மிகட்சி கடுமையாக எதிர்க்கும் நேர்மையான, மக்களுக்கான அரசியல் கட்சியாகவே எப்பொழுதும் இது செயல்படும் என சகட்டுமேனிக்கு வசீகரன் பொறிந்து தள்ளியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *