நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் தடுக்க நடவடிக்கை… அமைச்சர் உறுதி!

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லை மழையில் நனையாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேரவையில் அரசியல் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
பேரவையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடை மழையின் காரணமாக பல மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுள்ளதாவும், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி கிடங்குகளில் தார்பாய் போட்டு கூட மூடாமல் இருப்பதால் நனைத்து வீணாகும் நிலையில் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு நெல் அதிகமாக விவசாயம் செய்யும் இடங்களில் தானியக் கிடங்குகள் அமைக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த தீர்மானம் தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய உணவுத் துறை சக்கரபாணி, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் 51 சேமிப்புகிடங்குகளிலும், 166 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் பாதுகாக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஒன்றிய அரசு ஆன்லைன் மூலம் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய அறிவுறித்தி இருந்தாலும், விவசாயிகளிடம் இது குறித்து உரிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.