தொடர் நெருக்கடியில் ரஷ்யா..! பொருளாதார தடையை  அறிவித்தது ஆஸ்திரேலியா..!! 

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர்தொடுக்க தொடங்கி இன்றுடன் 50 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்றும் போரின் கோரத்தாண்டவம் குறைந்த பாடில்லை.

இதன் விளைவாக ரஷ்ய நாட்டின் மீது பல நாடுகள் தொடர்ந்து பொருளாதார தடையை  அறிவித்து  வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் ரஷ்யா மீது   பொருளாதார தடை விதித்தது. ஆனால் இந்த எதிர்ப்பை ரஷ்யா   கண்டுகொள்ளாமல் தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த பொருளாதாரத் தடை உலகளாவிய மார்க்கெட்டில் பாதிப்பை ஏற்படுத்துமே தவிர எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என ரஷ்யா தெரிவித்து இருந்தது. 

உலக நாடுகளுக்கு எதிராக இந்தியா மட்டும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் அணு ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகின்றனர். இதற்கு அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில்  அமெரிக்க, கனடா என நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் ரஷ்யா மீது  பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷ்ய நாட்டிற்குரிய 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை அறிவிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்திருக்கிறது. 

ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான பேய்ன், தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய நாட்டிற்குரிய பாதுகாப்பு துறைக்கான போக்குவரத்து நிறுவனம், கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் மின் சாதன பொருட்களுக்குரிய பாகங்களை தயாரிக்கக்கூடிய முக்கிய நிறுவனமான ரஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என  மொத்தம் 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை விதிப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *