இலங்கை அரசுக்கு உதவுமா..? சர்வதேச நாணய நிதியம்..!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால்  விலை வாசியானது விண்ணைத் தொடும் அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. அதிகரித்த விலைவாசியால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலையில் உள்ள இலங்கை தற்போது மீண்டும் அண்டை நாடுகளிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.ஒரு பக்கம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் விலைவாசி அதை தொடர்ந்து கடும் சரிவை நோக்கி செல்லும் பொருளாதாரம் என இலங்கை மிக மோசமான நிலையில் தற்போது  உள்ளன.இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதியினை சார்ந்திருக்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் தற்போது  இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் முதல் 4 பில்லியன் டாலர் வரை தேவைப்படுகிறது. ஏற்கனவே நிலுவையில் உள்ள கடனை சரியான காலகட்டத்தில் செலுத்த முடியாது என்று அறிவித்துள்ள இலங்கை, தற்போது மேலும் கடன் வாங்கும்  சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இலங்கைக்கு, சீனாவும் கடன் கொடுக்க மறுத்த  நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை தற்போது சென்றுள்ளது. 

ஆனால் சர்வதேச நாணயமும் சில நிபந்தனை விதித்து தான் கடன் கொடுக்க முடியும் என கூறிய நிலையில் வேறு வழி இல்லாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. ஏற்கனவே செலுத்த வேண்டிய கடனை கொடுக்க முடியாத நிலையில் உள்ள இலங்கை அரசு தற்போது மேலும் சிக்கலில் தவித்து வருகிறது.  இதனால் இலங்கையில் மேலும் கடன் சுமை அதிகமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்திடம் தஞ்சம் அடைத்துள்ளது இலங்கை.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *