ட்விட்டர் நிறுவனம் கையாளும் புது யுக்தி.. நிலை தடுமாறும் எலான் மஸ்க்..!! 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் எப்படியாவது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி விட வேண்டும் என திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே ட்விட்டரில்  9.2 % பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க் தற்போது முழு பங்கையும் வாங்க முயற்சித்து வருகிறார். ஆனால் அதற்கு ட்விட்டர் இயக்குனர் குழு, ஊழியர்கள் மற்றும்  முதலீட்டாளர்கள் ட்விட்டர் நிறுவனம் எலோன் மஸ்க் கைவசம் செல்வதை யாரும் விரும்பவில்லை.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தடுப்பதற்காக  பாய்ஸன் பில் என்ற முறையை தற்போது ட்விட்டர் நிர்வாகக் குழு கையாண்ட வருகிறது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றுவது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. 

பாய்ஸன் பில் என்பது ஒரு நபர் அல்லது ஒரு குழு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சிக்கும் போது அதை தடுக்கும் விதமாக அந்நிறுவனம் பயன்படுத்தப்படும் ஒரு உத்தி வகையாகும்.

பாய்ஸன் பில் அணுகுமுறையின் மூலம் சலுகை விலையில் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்க இயக்குநர்கள் குழுவிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் கையகப்படுத்த முயற்சிக்கும் நபரின் பங்குகளின் மதிப்பு குறைத்து அந்நிறுவனத்தை  கைப்பற்றுவது கடினமாகிறது. இந்த நிலையில் எலான் மஸ்க் என்ன செய்வது என நிலை தடுமாறி உள்ளார். 

இந்த முறையானது 1980களில் பாய்ஸன் பில் உத்தி அதிகம் பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், வணிகர்கள் சந்தையில் இருந்த நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவில் வாங்குவதன் மூலம் வலுக்கட்டாயமாக நிறுவங்களை கைப்பற்றி வந்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், பாய்ஸன் பில் உத்தியை பின்பற்றி சில நிறுவனங்கள் தங்களை காத்துக் கொண்டு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *