அட்சய திருதி -நகை கடைகளில் குவிந்த பொதுமக்கள் !!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை ‘அட்சய திருதியை’ என்று அனைவரும் அழைக்கிறோம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததால் நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்தன.
தற்போது கொரோனா தொற்று படிபடியாக குறைந்து கொண்டே வருவதால் இந்தாண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்றைய தினத்தில் அட்சய திருதியை முன்னிட்டு அதிகாலை முதல் மக்கள் நகை வாங்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தியாகராயன் நகரில் உள்ள அனைத்து தங்க நகைக்கடைகளில் தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டி சிவப்பு கம்பளத்தில் வாடிக்கையாளர்களை வரவேற்கிறார்கள்.
இன்று அதிகாலை 4.30 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் நகைவாங்க திரண்டுள்ளனர். குறிப்பாக காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும் பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் தங்கம் வாங்கலாம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அட்சய திருதியை கொண்டாடி வருவதால் தமிழகத்தில் மட்டும் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.