வடசென்னையில் கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிக்கு ரூ.198 கோடிக்கு டெண்டர்!

waste water

வடசென்னை முழுவதும் பழைய கழிநீர் குழாய்களை அகற்றப்பட்டு புதிய கழிவு நீர் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.198 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில கேள்வி நேரத்தில் பேசிய ராயபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, இராயபுரம் தொகுதியில் புதிய கழிவுநீர் உந்து குழாய்கள் அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே.நகர் மட்டுமல்லாது, வடசென்னை முழுவதும் பழைய கழிநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவு நீர் குழாய் 3 ஆயிரம் கோடி செலவில் அமைப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதனால் வடசென்னையில் எங்கேயும் கழிவுநீர் தேங்காமல் செல்லமால் இருக்கும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *