அடிதூள்… அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி… தமிழக அரசு அதிரடி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என பேரவையில் 110விதியின் கீழ் முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

இன்றைய பேரவைக்கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திட்டங்கள், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகளும் உள்ளிட்ட துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.முன்னதாக பேரவை கூட்டம் துவங்கியதும்
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் ஆனைதையொட்டு முதல்வர் அவர்கள் தங்கள் அரசின் ஓராண்டு சாதனைகளை பேரவையில் பதிவு செய்தார்.பின்னர் 110விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் 1)அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்.


2)6வயத்திற்கு உட்பட்ட குழந்தைகள் நலமுடன் இருக்க அவர்களுக்கு மருத்துவ வசதி, ஊட்டச்சத்து வழங்கப்படும்.


3)தமிழகம் முழுவதும், தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். 21மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

4)மாநகராட்சி,நகராட்சிகளில் 708 நகர்புற மருத்துவ நிலையங்கள் உருவாக்கப்படும்.

5)உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டம் 234 தொகுதியிலும் விரிவு படுத்தப்படுகிறது.


மேலும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி மக்களின் தேவை அறிந்து 10 முக்கிய திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும். அதிலுள்ள முக்கிய திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *