சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை… அறநிலையத்துறை அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இம்மாத இறுதியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சுழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரிய பாளையத்து அம்மன் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை ராயப்பேட்டை சித்தி புத்தி விநாகயகர் கோயில், பெரியபாளையத்து அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டோம். சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் கோயில்களை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சித்தி புத்தி வினாயகர் கோயில், பெரியபாளையத்து அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிகாரிகளை ஆய்வு செய்ய மறுக்கப்பட்டு உள்ளதை பதிவு செய்துள்ளோ என்றும் சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *