அரை நிர்வாண போராட்டம் நடத்திய பெண்…!
2 மாதங்களுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று கொண்டிருக்கிறது.இந்த போரில் உக்ரைன் பெண்களை ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இந்த குற்றச்சாட்டுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில், பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திரைபிரபலங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிவம்பு கம்பள வரவேற்பில் பெண் ஒருவர் மேலாடையின்றி அரை நிர்வாணமாக ஓடியதுதான் அது.
அந்த இளம்பெண்ணின் மார்பில் உக்ரைன் நாட்டின் தேசியக்கொடியில் உள்ள நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள் என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார் இளம்பெண். மேலும், இடுப்புக்கு கீழ் அணிந்த ஆடையில் ரத்தத்துடன் கைரேகைகள் இருப்பது போன்றும் சிவப்பு பெயிண்ட் பூசப்பட்டிருந்தது. இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சற்றும் தாமதிக்காத அவர்கள், பெண்ணின் மீது துணியை போர்த்தி அங்கிருந்து வெளியேற்றினர். திரைபிரபலங்களின் கலக்கலான ஆடை, வண்ணங்களால் மிளிரும் அரங்குகள் என அமர்க்களமாக நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில், தங்களது நாட்டின் அவலத்தை உலக்குக்கு எடுத்துச்சொல்ல இளம்பெண் கையில் எடுத்த உணர்வுப் போராட்டம் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.