வேகமாக பரவும் குரங்கு அம்மை: சிறப்பு சிகிச்சை தீவிரம்!
கடந்த சில நாட்களாக குரங்கு அம்மை நோய் பல்வேறு நாடுகளில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகள் போன்ற நாடுகளில் சிலருக்கு குரங்கு அம்மை நோய் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்பிரிக்க நாடுகளின் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதின் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.
இதற்கு முன் ஆப்பிரிக்கா சென்று வந்தவர்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளான நிலையில் தற்போது குரங்கு அம்மை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது என்ற நிலையிலும் கவனமுடன் இருக்க மருத்துவர்கள் எச்சரித்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் முன் எச்சரிக்கையாக இருக்க சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன கருவிகளின் உதவியுடன் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டு அம்மை நோயால் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்றும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களின் சளி, ரத்தமாதிரி எடுக்கப்பட்டு, புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் 5 நாட்களுக்குள் உடலில் ஆங்காங்கே சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றி பின்பு கொப்பளங்களாக மாறும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே குரங்கு அம்மை நோய்யில் இருந்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.