சமூக வலைத்தளதில் அதிகரிக்கும் வன்முறை பதிவுகள் – அதிர்ச்சி தந்த மெட்டா அறிக்கை
சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் பல கோடி மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுதந்திரமான கருத்துக்களை பயன்படுத்த இந்த இரண்டு வலைத்தளத்தை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெறுப்பு பதிவுகள் 82 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வன்முறையை தூண்டும் பதிவுகள் 86 சதவீதம் அதிகரித்துள்ளது என மெட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவேற்றப்படும் பதிவுகள் புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது. எங்கள் தரநிலை களுக்கு எதிராக இருக்கும் பதிவுகள் மீது இந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்க போவதாகவும் மெட்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் இந்த கருத்தை பதவி விட்டுள்ளனர். மெசேஜ் செயலி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று பலரும் இந்த செயலியை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றனர் என குறிப்பிட்டார்.