சம்மன் எல்லையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் – தாயகம் திரும்பிய ஆப்கான் மக்கள்
ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் சம்மன் என்ற பகுதியை தங்களது எல்லையாக கொண்டிருந்தனர். கொரோனா காலத்தால் இந்த எல்லை மூடப்பட்டது. இதனால் இருநாட்டு மக்களும் தங்கள் தாயகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆப்கான்சிதானுடனான சம்மன் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் திறந்ததை அடுத்து பாகிஸ்தானில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் தங்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடி வருவதால் ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக வரக்கூடும் என்பதால் செப்டம்பர் மாத இறுதியில் சம்பன் நிலையை பாகிஸ்தான் அரசு மூடியது.இரு நாடுகளை இணைக்கும் முக்கிய எல்லை மூடப்பட்டதால், தொழில் ரீதியாக பாகிஸ்தான் சென்ற அப்கானியர்களால் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. பேச்சுவர்த்தையைத் தொடர்ந்து மீண்டும் சம்மன் எல்லை திறக்கப்பட்டது.
ஒரு மாதத்துக்கு மேலாக உணவு மற்றும் தங்கும் வசதி இன்றி பாலிஸ்தானில் தவித்த வந்த தற்போது ஆப்கானியர்கள் மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்பினர்.