இங்கிலாந்தில் காந்தியின் உருவப்படம் பொறித்த நாணயம் வெளியீடு

 இங்கிலாந்தில் அந்நாட்டு அரசு ஒவ்வொரு வருடமும் உலக தலைவர்களின் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் உருவபடம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு  அவர்களை பெருமைபடுத்தி வருகிறது.

      அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தின் பொருளாதார பிரிவு தலைவர்ரிசி சுனாக் கூறுகையில் “இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு மகாத்மா காந்தி பெருமைப் படுத்தி உள்ளது. அந்த நாணயம் தங்கம் மற்றும் வெள்ளியில் வட்ட வடிவில் வெளியாக உள்ளது. மேலும் இது சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கு அல்ல. அந்த நாணயத்தில் இந்திய நாட்டின் தேசிய மலரான  தாமரை பூ ஒரு பக்கமும் ,  மகாத்மா காந்தியின் அறிவுரை வார்தைகளான “என் வாழ்க்கையே உங்களுக்கான அறிவுரை” என்ற வாசகம் ஆங்கிலத்திலும் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு பல நாட்டு தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *