பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்கா பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவில் இரண்டாவது பெரிய நகரம் மாரடி ஆகும் . இந்த நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடம் கூரையால் வேயப்பட்டதால் தீ எளிதாக பற்றிக்கொண்டது.மேலும் இந்த தீ விபத்தால் 3 மழலையர் மற்றும் தொக்க பள்ளிகள் தீயில் கருகின.
இதனால் 3 வயது முதல் 8 வயது வரையுள்ளான 26 குழுந்தைகள் தீயின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நியாமோவின் புகா்ப் பகுதியில் நடந்த தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தனர். தற்பொழுது மீண்டும் அதே போன்று நடந்துள்ளது. அதாவது வைக்கோலால் வேயப்பட்ட வகுப்பறையின் ஆபத்தை இந்த சம்பவங்கள் உணர்த்துவதாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.