தாய்வானை தாக்க தயாராகும் சீனா
சீனாவுக்கும் தைவானுக்கும் கடந்த சில நாட்களாகவே பதற்றமான போர் சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது மேலும் அதிகரித்துள்ளது.ஏனென்றால் சீனாவின், வான் மற்றும் கடல் படையை பல படுத்தி வருகிறது என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சீனா எந்த நேரத்தில் தைவானின் வான் மற்றும் கடல் போக்குவரத்தை தடுத்துவிட முடியும் என்று என்று அறிக்கை விடுத்துள்ளது. இது அங்கு வாழும் தைவான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் சீனா தனது ஏவுகணைகளை கொண்டு தாய்வானின் முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்கள், வெளிநாட்டை நோக்கிய பயணப் பாதைகள் போன்றவற்றைச் சீனா துண்டித்துவிட கூடும் என்று அஞ்சப்படுகிறது.சீனாவுக்கும் , தைவானுக்கு மிடையே கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் போர் சூழல் உருவாகியுள்ளது.
தங்கள் நாட்டை ஜனநாயக நாடாக கருதும் தைவானை தனக்குச் சொந்தம் எனக் கருதும் சீனா, எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சீனா முயல்வதாக நம்பப்படுகிறது. .
அது தொடர்பில் சீனா, அதன் போர் விமானங்களைப் பல முறை, தாய்வானிய வான் எல்லைக்குள் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.