இந்த கிராமத்தில் வாழ ஆண்களுக்கு அனுமதி இல்லை!!

ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள கென்யாவில் சம்புரு மாநிலத்தில்  உமோஜா  என்ற ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்கள் வாழ அனுமதி இல்லை. பிரிட்டிஷ் இராணுவத்தினரின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 1900-ம் ஆண்டு இந்த கிராமம் உருவாக்கப்பட்டது.

       பின்னர் வீட்டில் நடக்கும்  வன்முறைகள் பாதிக்கப்பட்டவர்களும் , பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களும் , குழந்தை திருமணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களும் இங்கு கிராமத்திற்கு வந்து வாழத் தொடங்கினார். மாட்டு சாணம் மற்றும் மண் கலந்த கட்டப்பட்ட மானட்டாவால்  இந்த கிராமம் நிறைந்துள்ளது. மேலும் பாதுகாப்புக்காக இந்தக் குடிசையை சுற்றி முள்வேலிகள் போடப்பட்டுள்ளன. அங்கு பெண்களுக்காக ஆரம்பப் பள்ளிகள் நடந்து வருகின்றனர்.

       கிராமத்தில் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெண்கள் மட்டும் வாழ்வது கடினமாக இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மேலும் ஆணாதிக்கம்  இல்லாமல் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ஆண்களுக்கு அங்கு சுற்றி பார்க்க மட்டுமே அனுமதி உள்ளது.மேலும், சிறு பிள்ளைலிருந்து  வளரும் ஆண்களுக்கே அங்கு வாழ அனுமதி உள்ளது.

  நாளுக்கு நாள் பெண்களுக்கான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கிராமம் பெண்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *