சிறுமியை பட்டினி போட்டு கொன்ற ஐ எஸ் தீவிரவாதிகள்

ஈராக்கின் வட பகுதியிலும் சிரியா நாட்டில் வசித்து வரும் குருதிஸ் மொழி பேசும் சிறுபான்மை சமூகம் தான் யாஸிடி . இந்த இரு நாடுகளிலும் வலுவடைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள், யாஸிடி இனத்தைச் சேர்ந்த மக்களை சிறைபிடித்து கொடூரமாக கொல்வதுடன் அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களை வீட்டு வேலைகள் செய்ய அடிமைகளாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிரியாவில் அடிமையாக இருந்த ஒரு சிறுமியை உணவு தண்ணீர் என்று எதுவும் கொடுக்காமல் சங்கிலியால் கட்டி வைத்து சித்திரவதை செய்து  கொன்றுள்ளனர் ஐ எஸ் தீவிரவாதிகள்.

        சர்வதேச சமூக அமைப்புகள் தெரிவித்த புகாரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிரீஸ் நாட்டின்Taha Al-Jumailly-ம் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். உலகளாவிய நீதி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜெர்மனி நீதிமன்றம், இந்த இனப்படுகொலை வழக்கை விசாரித்தது.

2 ஆண்டுகளுக்கு முன் நாடு கடத்தப்பட்டு கணவன், மனைவி இருவரும் ஜெர்மனி கொண்டு வரப்பட்டனர். யாஸிடி இனத்தை அழிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதால் இதனை இனப்படுகொலை என குறிப்பிட்டு,   Taha Al-Jumaillyக்கு ஆயுள் தண்டனை விதித்தது ஜேர்மனி நீதிமன்றம். அவரது மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் தாயாருக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. யாஸிடி இனப்படுகொலை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை மனித உரிமை  ஆர்வலர்கள் வரவேற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *