3200 கோடி பணத்த வாங்க ஆளில்லை – லாட்டரியில் கிடைத்த பணத்தை வாங்க ஆளில்லை
மனிதர்களில் சில பேர் உடம்பு நோகாமல், மூளையை கசக்காமல் பணம் சம்பாரிக்கும் ஆசை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்காக ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கி வைத்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும் செயல் இன்றளவும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது . இன்னும் சிலர் லாட்டரியில் பணம் வரவில்லை என்ற காரணத்தினால், தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் லாட்டரியை கடந்த 10-15 வருடங்களுக்கு முன்பே தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் ஒருவர் வீட்டுக்காக பொருட்கள் வாங்க சென்ற போது, லாட்டரியும் கூட வாங்கிச் சென்ற நிலையில், அன்று மதியமே அவருக்கு சுமார் 12 கோடி ருபாய் பரிசு விழுந்து, அவரை கோடீஸ்வரன் ஆக்கியது. இந்நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் நிகழ்ந்துள்ளது. ஆனால் பரிசு தொகையை சொன்னால் தலையே சுத்தும்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உட்லேண்ட் ஹில்ஸ் பிரிவில் இருக்கும் கேஸ் நிலையம் ஒன்றில், அந்த லாட்டரி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரே ஒரு லாட்டரி வாங்கிய அந்த நபருக்கு, சுமார் 3,200 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உட்லேண்ட் ஹில்ஸ் பிரிவில் இருக்கும் கேஸ் நிலையம் ஒன்றில், அந்த லாட்டரி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரே ஒரு லாட்டரி வாங்கிய அந்த நபருக்கு, சுமார் 3,200 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது.
இது பற்றி, கலிஃபோர்னியா லாட்டரி இயக்குனர் ஜான்சன் பேசும் போது, ‘ஏதாவதொரு சமயங்களில், இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்காவது கிடைக்கும். ஆனால், இப்போது அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியவில்லை. அவர் விருப்பப்படி தனக்கு கிடைத்த பரிசு தொகையை, ஒரே தவணையிலோ அல்லது தவணை முறையில், 29 ஆண்டுகளாகவும் வாங்கிக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.