இனி பைக்லியே பறக்கலாம்! விரைவில் வரவுள்ளது பறக்கும் பைக்
கடந்த சில மாதங்களாகவே பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதை விரும்புகிறார்கள். விரும்புகிறார்கள் என்று சொல்வதை விட நிர்பந்திக்கபட்டர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பெட்ரோல் டீசலின் விலை கடும் உச்சத்தை தொட்டது. இதனால் தான் மக்கள் மின்சார வாகனத்தை பயன்படுத்த தொடங்கினார்கள். மேலும் மின்சார வாகனத்தை பயன்படுத்துவது தான் சுற்றுப்சூழல் பாதிப்பை குறைக்கும்.
இந்நிலையில் “இப்போது உள்ள இளைஞர்கள் பைக்’கிளே பறக்கிறார்கள்” என்ற வாக்கியம் தற்போது நிஜத்தில் வரவுள்ளது. ஜெட்சன் என்ற ஸ்வீடன் மற்றும் போலந்து நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் தான் இந்த பறக்கும் பைக்கை உருவாகியுள்ளது. இது இங்கிலாந்தில் விற்பனைக்கு வரவுள்ளது.இந்த பைக் சுமார் 101 கி.மீ வேகம் வரை செல்ல கூடியது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் இந்த பைக் மின்சாரத்தால் இயங்க கூடியது. மேலும் இந்த வாகனத்தின் விலை, 68,000 யூரோ(இந்திய ரூபாயின் மதிப்பின்படி 58 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.