உடலுறவுக்கு பின் வீசி எறியப்பட்ட பெண்களின் உடல்கள் – ரஷ்ய ராணுவத்தினரின் அருவெறுக்கத்தக்க செயல்
உக்ரைன்-ரஷ்யாக்கிடையே நடக்கும் போரின் எதிரொலியாக ஆயிரக்கணக்கான மக்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இப்போரை நிறுத்துமாறு உலக நாடுகளும், ஐ.நா ரஷ்யா கூறி வருகிறது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. ஆனாலும் போரை நிறுத்தாமல் தொடர்ந்து உக்ரைன் மக்களையும், ராணுவ வீரர்களையும் கொன்று குவித்து வருகின்றனர் ரஷ்யா ராணுவத்தினர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்ரைனின் புச்சா என்ற பகுதியில் 400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து மரியுபோ என்ற பகுதியில் 1000-த்திற்கும் அதிகமான மக்களை ரஷ்ய ராணுவ வீரர்கள் கொன்று குவித்ததாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்து அவர்களின் உடல்களை வீசி விட்டு செல்வதாக உக்ரைன் எம்.பி லிசியா வலிலெங்கோ தெரிவித்துள்ளார்.
அதன்படி உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள புறநகர் பகுதிகளில் உடலுறவு கொள்ளப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களின் சடலமாக நிர்வாண நிலையில் ஒரு பாலிதீன் கோணியில் போடப்பட்டு எடுத்து செல்லப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினரான லிசியா வலிலெங்கோ
இதுகுறித்து அவர் ட்விட்டரில் ‘இது போர்க்குற்றம் நடந்ததற்கான சாட்சி புகைப்படம். அதில் நிர்வாணமாக ஆண்களும் பெண்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட உடல்கள் தான் இவை என்றார் .மேலும் ரஷ்ய வீரர்கள் அவர்களின் உடல்களில் டாட்டூக்கள் அடையாளங்கள் இருந்ததா என தேடியும் சோதித்தும் பார்த்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.மற்றொரு புகைப்படத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டு புதைக்கப்படுபவர்களை நினைத்து அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் கதறி அழுவதை வெளியிட்டுள்ளார்.