இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடும் நிலையில்..!! ஆட்சியை தக்கவைக்குமா ராஜபக்சே அரசு.. !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்  கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இந்த நிலையில் நடுத்தர மக்கள் இலங்கையில் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டு தமிழகம் நோக்கி வர தொடங்கினர்.

இதனிடையே, இந்த பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசின் தவறான கொள்கைகள் தான் காரணம் என இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.அதேபோல் மக்களும் இலங்கை அரசுக்கு எதிராக தலைநகர் கொழும்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கை பொருளாதார பிரச்சனை தீர பிரதமர் மகிந்த ராஜபக்ச  பதவி விலக வேண்டும் என நீக்குமாறு எதிர்க்கட்சிகள், அதிபர் கோட்டாபய ராஜபக்சே விடம் தெரிவித்தனர். அதிபர் கோட்டாபய ராஜபக்சே அதை மறுத்த நிலையில் எதிர்கட்சியினர் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர் . அதில், அதிபர் மற்றும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் 113 க்கு பேருக்கு மேல் ஆதரவு தருவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா தெரிவித்தார். இதனால்  இலங்கை அரசு கவிழும் நிலை ஏற்படும் என்றனர்.  இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

இதற்கு பதில் அளித்த  மகிந்த ராஜபக்ச நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும். நான்  பிரதமராக மீண்டும் தொடருவேன் என்று மகிந்த ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *