பன்முகத்தன்மை தான் நம்முடைய அடையாளம்.. டென்மார்க்கில் பிரதமர் மோடி பெருமிதம்..!

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த 2 ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை டென்மார்க் நாட்டுக்கு சென்று அடைந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு டென்மார்க் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக டோல் இசைக் கலைஞர்கள்  கொண்டு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரதமர் மோடியும்  இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து ஒரு கையில் டோல் கருவியை இசைத்து மகிழ்ந்தார். இந்த வரவேற்பை தொடர்ந்து பிரதமர் மோடி டென்மார்க் பிரதமரை சந்தித்து உரையாடினார். இதில் இந்தியா-டென்மார்க் இடையே சில முக்கியமான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து டென்மார்க் ராணியை பிரதமர் மோடி சந்தித்து . அவரின் 50 ஆண்டு  ஆட்சிக் காலம் குறித்து  வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பு முடித்த பின்பு அதன்பின்னர் டென்மார்க்  உள்ள இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர் பன்முகத்தன்மை தான் இந்தியர்களின் முக்கியமான சிறப்பம்சம் என பெருமிதம் கொண்டார். இந்தியர்கள் எந்த மொழி பேசினாலும் அவர்களுக்குள் இருக்கும் இந்தியர் என்ற உணர்வு தான் சிறப்பானது குறிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

மேலும் அவர் பேசுகையில்  நான் எந்த நாட்டு தலைவர்களை சந்தித்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறுவார்கள் இது நமக்கு கிடைத்த பெருமை என்ற பெருமிதம் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *