பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி..!! உயரும் எரிபொருட்களின் விலை..!!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டிலும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இந்த விளைவாக பெட்ரோல் மற்றும் மின்சாரத்தின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர்களை மறுநிதியளிப்பதற்கு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
இந்த நிதி பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் பேசிய போது எரி பொருளுக்கான வரி எதுவும் வசூலித்ததால் 30 ரூபாய் உயர்த்தப்பட்ட போதிலும் அரசாங்கம் இன்னும் 9 ரூபாய் இழப்பை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன்பு பாகிஸ்தானில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய மின்சக்தி ஒழுங்குமுறை ஆணையம் அடிப்படை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது அடிப்படை மின் கட்டணம் ரூபாய்க்கு மேல் இருக்கும். மேலும் நாட்டில் சர்க்கரை மற்றும் கோதுமை யின் விலைகள் முறையே அதிகரித்தது குறித்து பேசுகையில் விரைவில் இது குறைக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று இஸ்மாயில் கூறினார்.
ஐஎம்எஃப் என்ன சொன்னாலும் அரசாங்கம் பெட்ரோல், டீசலை நஷ்டத்தில் விற்க முடியாது என்றும் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.