தயாரிப்பாளராக மாறிய கீர்த்தி சுரேஷ்!
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறை பயணத்தை துவங்கிய கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் என்ற விக்ரம் பிரபு நடித்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்பு தமிழ், தெலுங்கு மலையாளம் என அணைத்து முன்னணி கதாநாயகனுடன் இணைத்து நடித்து கொண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார்.
தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’, மோகன் லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி, பல்வேறு பிரபலங்களுடன் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரை படம் ‘அண்ணாத்த’. இந்த திரை படத்தில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்து இருந்தார். இந்த திரைப்படம் பல விதமான எதிர்மறை விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை அடைந்துள்ளது.
அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார். ‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்கவிருக்கிறார்.