ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்ட நாகசைதன்யா மற்றும் சமந்தா!

தென்னிந்தியா சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் சமந்தா. இவர் ஃபேமிலி மேன் என்ற வெப் சீரீஸ் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த வருடம் இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. விவாகரத்துக்குப் பிறகு சமந்தா பல திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார்.

படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பது மட்டுமில்லாமல் தனது நண்பர்களின் வட்டத்தை பெருக துவங்கி இருக்கிறார். சினிமா துறையில் தனது நண்பர்களுடன் தனது நேரத்தை கழித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தனது நண்பர்களுடன் வெளியூர் பயணம்  மேற்கொண்டும் வருகிறார். அந்த புகைப் படங்களையெல்லாம் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சமந்தா பகிர்வது உண்டு. விவாகரத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த  திரைப் படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடி இருப்பார். தற்போது அந்தப் பாடலின் வீடியோ பதிவு வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் சந்தித்து கொண்டதாக செய்திகள் பரவி வருகிறது. சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் வெவ்வேறு பட ஷூட்டிங்குக்காக ஒரே ஸ்டுடியோவுக்கு வந்து உள்ளனர். மேலும் ஒரு இடத்தில் இருந்தும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அவர்கள் வேலை முடிந்ததும் அவரவர் காரில் ஏறி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *