வாடக்கை கொடுக்காமல் ஏமாற்றிய அனிருத்…ஆத்திரம் அடைந்த உரிமையாளர்!

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தனது 21 வயதில் இசையமைப்பாளராக தன் பயணத்தை 3 திரைப்படத்தின் மூலம் துவங்கினார். முதல் படத்திலேயே இவர் உலகம் முழுவதும் பேசப்பட்டார். இவரின் இசையில் உருவான ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் வெற்றி பெற்றது. தற்போது அனிருத் ரவிச்சந்திரன் தமிழ் திரை உலகில் பல அவார்டுகளை குவித்து இளம் இசை அமைப்பாளராக இருந்து வருகிறார். அனிருத் ரவிச்சந்திரன் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்போது இவர் அஜித்குமாரின் 61-ஆவது திரைப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அனிருத் மீது வழக்கமாக பல சர்ச்சைகள் வெளியாகுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த முறை இவர் மீது ஒரு சர்ச்சை சமூக வலைத்தளங்களில் கிளம்பி பலரால் பலவிதமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது அனிருத் சென்னையில் மிகப்பெரிய ஸ்டூடியோ ஒன்றை வாடகைக்கு எடுத்துதான் தான் அவர் படங்களுக்கு இசை கம்போஸ் செய்து வருகிறாராம். அந்த ஸ்டுடியோவிருக்கு மாதம் வாடகை சுமார் 2 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. அந்த ஸ்டூடியோவின் உரிமையாளர் துபாயில் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக அனிருத் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

வாடகை குறித்த உரிமையாளர் பலமுறை செல்போனில் கேட்டதாகவும், அதற்கு அனிருத் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் துபாயில் இருந்து சென்னை வந்த அனிருத்தை நேரில் சந்தித்து வந்துள்ளார். உரிமையாளர் சென்னைக்கு வந்தது தெரிந்து அனிருத் ரவிச்சந்திரன் தற்போது துபாய்க்கு தலைமறைவாகியுள்ளார். தற்போது அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒரு திரைப்படத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் இருக்கும் அனிருத் இப்படி வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது சரியா ? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *