அடுத்த படத்திற்கு ஒப்பந்தமாகியாச்சு….கதாநாயகனாக சுந்தர்.சி!
தமிழ் சினிமாத்துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் பல திரைப்படங்களை இயக்கியது மட்டும் இல்லாமல் நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக அரண்மனை-3 படபாத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் திரையங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
பரமபதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கே.திருஞானம். இவர் இரண்டாவதாக ஒன் டு ஒன் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் சுந்தர்.சி நடிக்க உள்ளார். சுந்தர்.சி உடன் கதாநாயகியாக ராணி தேவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.