தொடர்ந்து புஷ்பா படத்திற்கு கிளம்பும் எதிர்ப்பு…காரணம் இதுதான்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் வெளியாகி வசூல் குவித்தது. இதில் சமந்தா ஆடிய ஓ சொல்றியா மாமா குத்தாட்ட பாடலும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் எடுக்கப்பட்டு.

படத்தில் அல்லு அர்ஜுன் போலீசுக்கு தெரியாமல் செம்மரங்கள் கடத்தும் தாதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் புஷ்பா படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தெலுங்கு இலக்கியவாதியும், சமூக ஆர்வலருமான கரிகாபதி நரசிம்மராவ் அளித்துள்ள பேட்டியில், சமூகத்தில் நடக்கும் தீமைகளுக்கு புஷ்பா போன்ற படங்கள் தான் காரணம். இந்த படம் ஒரு கடத்தல்காரனை உயர்வாக சித்தரித்துள்ளது.

அவர்களை கதாநாயகனாகவும் கொண்டாடுகிறது. நாயகன் ஸ்டைலில் பலர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள். இந்த படம் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமூக சீர்கேடுகளை ஊக்குவிக்கிறது. இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் தீய வழியில் சென்றால் கடவுளுடன் பொறுப்பு ஏற்பார்கள் என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *