கேரளாவில் கிளம்பிய சிக்கல்…வருத்தத்தில் தமிழ் இயக்குனர்!
கார்த்தி நடித்த கைதி படம் 2019-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த படம் தற்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கைதி 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வந்தனர்.
கைதி 2-ம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படம் ஆகிவிட்டதாகவும்,30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கைது படத்தின் கதை தன்னுடையது என்று கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால் கைதி படத்தை ரீமேக் செய்யவும் இரண்டாம் பாகம் எடுக்க வும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் கைதி 2-ம் பாகத்திற்கு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்ததுடன் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனால் கைதி 2-ம் பாகம் எடுப்பதற்கான தடை நீங்கி உள்ளது. விரைவில் படவேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.