மீண்டும் கவர்ச்சியில் கவனத்தை செலுத்தும் யாஷிகா!

கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன. கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வந்தார்.

சமீபத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல மாதங்கள் ஓய்வு எடுத்து பூரணமாக குணமடைந்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார். கடமையை செய், பாம்பாட்டம், சல்பர், உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். யாஷிகாவை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தி ஆக்ட்டிவாக இல்லை. தற்போது மீண்டும் கவர்ச்சி படங்களை பதிவு செய்ய துவங்கிவிட்டார். தற்போது புதிதாக அரைகுறை உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கவர்ச்சியில் எல்லை மீறி இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *