கட்டுமானப் பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு
தமிழ்நாட்டில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் செங்கல் சூளைகளில் உற்பத்தி பணிகள்பாதிப்பு அடைந்துள்ளது. அதனால் செங்கலின் விலை அதிகரிக்கக்கூடும் என்று செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஒரு செங்கல் 8 ரூபாய்க்கும், சேம்பர் செங்கல் 10 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதுவும் ஸ்டாக் உள்ளே செங்கல்கள் மட்டுமே இந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள். எனவே வரும் நாட்களில் மழை காரணமாக கட்டுமானப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டும். இது குறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறுகையில்; செங்கல் தயாரிப்பது ஒரு நாளில் நடக்கக்கூடிய காரியம் கிடையாது என்கிறார்கள்.
பொதுவாக செங்கல் அறுத்து ஒரு வாரம் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். பின்னர் ஒன்றாக அடுக்கி அதனை நன்றாக நெருப்பில் சூடேற்ற வேண்டும். பின்னர் அதனை பிரித்து எடுத்து பணிகளை முடிப்பதற்கு இரண்டு நாட்களாவது மழை பெய்யாமல் இருக்க வேண்டும். இப்படி மொத்தமாக பார்த்தால் ஒரு செங்கல் தயாரிக்க இரண்டு வாரங்கள் தேவைபடும் . இதனாலேயே நாங்கள் மழை காலங்களில் செங்கல் தயாரிப்பதை நிறுத்தி வைப்போம். இதனால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.