ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவியாக ரூ 200 கோடி – ஒன்றிய பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிப்பு

இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 5ஜி அலைகற்றை ஏலம், டிஜிட்டல் கரன்சி ஒப்புதல், ஆத்ம நிர்பர் திட்டம், இ பாஸ்போர்ட் வழங்குவது, 22,000 கி.மீ. தொலைவுக்கு சாலை,பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.48,000 கோடி ஒதுக்கீடு போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. அதன்படி  ஒன்றிய பட்ஜெட்டில் ஆப்கானிஸ்தானில் இந்திய செயல்படுத்தி வரும் வளர்ச்சித் திட்டங்களுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்று கொண்டது முதல் அங்கு பெரும் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தாலிபான்கள் மற்ற நாடுகளுடன் நட்புறவு கொள்ளாததால், ஆப்கானிஸ்தானுக்கு உதவ பெரும்பாலான நாடுகள் முன் வரவில்லை.இந்நிலையில் இந்தியாவின் இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தானுக்கு பெரும் உதவிய இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானை தொடர்ந்து மியான்மர் நாட்டிற்கும் 600 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது ஒன்றிய அரசு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *