பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கும் போது அவர் ஆஸ்திரேலிய அணியுடன் கலந்து கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் கிளென் மெக்ராத். மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வருகிற புதன்கிழமை சிட்னியில் தொடங்குகிறது. ஏற்கனவே, இந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.