தமிழ்நாட்டை பின்தொடரும் மம்தா பானர்ஜி !
மேற்குவங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க அம்மாநில அரசு சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற உள்ளது.
மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்துள்ளன. தற்போதைய நடைமுறைகளின்படி மேற்குவங்க ஆளுநர், அந்த மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார். அந்த வகையில் பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் முறைதான் மேற்கு வங்காளத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து முரண்பட்டு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நடைமுறையினை மாற்றி மாநில முதல்வரே பல்கலைக்கழங்களின் வேந்தராக பதவி வகிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்வரே துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தினை பெறுவார். கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி மேற்குவங்க சட்டப்பரவையில் விரைவில் சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் சட்ட திருத்தம் மசோதா
கடந்த மாதம் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசு நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.