நாங்க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாலைக்கு 5,00,000 கோடி முதலீடு செய்யப்படும்- நிதின் கட்கரி.
உத்திரபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய, ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் சாலை திட்டங்களுக்காக மட்டும் ரூ.5,00,000 கோடி முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக அந்த மாநிலத்தை பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் முகாமிட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் அந்த மாநிலத்தில் பிரதாப் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் சாலை திட்டங்களுக்காக மட்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.5,00,000 கோடி முதலீடு செய்யப்படும்.
அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் உள்ள சாலைகளை போன்ற தரத்தில் நம் மாநிலத்திலும் சாலைகளை நான் உருவாக்குவேன் அவர் தெரிவித்தார்.