பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக..! பதவியேற்க போகும்  தலைமை நீதிபதி..

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியினர்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசியல் அமைப்புக்கு எதிரானது என கூறி துணை சபாநாயகர் காசிம் சூரி  நாடாளுமன்றத்தை கலைத்து விட்டார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில்   நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளது. பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும்  எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடுவது ஏன் என  கேள்வி எழுப்பியுள்ளார். 

நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடாமல் அந்நிய நாட்டின் ஒரு சிலரின் பேச்சால் எதிர்க்கட்சிகள் இப்படி செய்கிறது. அதை முறியடிக்கும் வகையில் இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என நேற்று ( திங்கள்கிழமை)  பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தொடர்ந்து அடுத்த 90 நாட்களில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் தேர்தல் முடியும் வரை, பாகிஸ்தான் பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை  இடைக்கால பிரதமராக நியமிக்குமாறு அதிபர் ஆரிஃப் அகமதுக்கு இம்ரான்கான் இன்று பரிந்துரை செய்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *