எருமை கூட கருப்பா தான் இருக்கு?… யுவனை கலாய்த்த சீமான்!

யுவன் ஷங்கர் ராஜாவின் கருத்தை எருமையுடன் ஒப்பிட்டு சீமான் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இளையராஜா மோடியையும், அம்பேத்கரையும் சமமாக வைத்து கருத்து தெரிவித்தது சோசியல் மீடியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று யுவன் ஷங்கர் ராஜா கருப்பு நிற உடையில் ‘கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன்’ என பதிவிட்டிருந்தார். இதுகுறித்து சீமான் தெரிவித்துள்ள கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: மோடியை புகழ்ந்து பேசியதால் இளையராஜாவிற்கு விருது கொடுப்போம் என்கிறார்கள், அது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்காக இளையராஜாவை விமர்சிக்க வேண்டியதில்லை, அவரை விட பெருமையாக நிறைய பேர் மோடியை பற்றி பேசி இருக்கிறார்கள்.

திராவிடனா இரு இல்லையென்றால் தமிழனா இரு ? ஏன் குழப்பம் ? தேவைப்பட்டால் இந்தியன் என்கிறீர்கள் , தமிழன் என்கிறீர்கள் , ஏன் இத்தனை முகமூடி ? யுவன் சின்னப்பிள்ளை என்பதால் புரிதல் இல்லை.

கே.ஜி.எப் யாஷ் கூட பெருமைமிகு கன்னடிகா என்கிறார். அதே போல பெருமைமிகு தமிழன் என்று மட்டும் சொல்ல வேண்டியது தானே ? கருப்பா இருந்தால் திராவிடர் என்றால் எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது , எருமை திராவிடரா ? உழைக்கும் மக்கள் நிறம் கருப்பாக தான் இருக்கும் என யுவனை கேலி செய்வது போல் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *