மரண தண்டனை கைதிக்கு ‘ஏ’ கிளாஸ் ஜெயில்… தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை!

chennai high court

நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமாருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனக்கு முதல் வகுப்பு வழங்க வேண்டுமென புழல் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் வழக்கு தொடர்ந்தார்.

கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவருக்கு முதல் வகுப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு சிறை விதிகளின் படி தடை இருப்பதால், முதல் வகுப்பு வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. மனுதாரர் மருத்துவர் என்பதால் ஏ க்ளாஸ் வழங்கலாம் என நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *