போதை மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்: 7 பேர் அதிரடி கைது!!

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ராஜ் (45) வயதான எலெக்ட்ரீசியன் மது போதைக்கு அடிமையானதால் மூன்று மாதங்களுக்கு முன் அங்குள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய ராஜ் மீண்டும் மது போதைக்கு அடிமையானதால் கடந்த திங்கள்கிழமை மது அருந்திவிட்டு தெருவில் தகராறு செய்துள்ளார். இதனால் மறுவாழ்வு மையத்திற்கு அவரது மனைவி தகவல் தெரிவித்ததையடுத்து போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் ராஜை அழைத்து சென்றனர்.

இந்நிலையில் அதிகாலையில் போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் ராஜின் மனைவியான கலா அவர்களுக்கு தொடர்பு கொண்டு உங்கள் கணவர் கீழே விழுந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இதனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராஜை பார்க்க முயன்றுள்ளார்.

ஆனால் கணவரை பார்க்க மையத்தின் ஊழியர் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் தனியார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று ஆய்வு செய்த காவல்துறையினர், போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த லத்திகள் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றி அங்கு பணிபுரியும் சில ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே போதை மறுவாழ்வு மையத்தில் ராஜை தாக்கிய யுவராஜ், சதீஸ், சுடு தண்ணீர் ஊற்றிய சமையல்காரர் சரவணன், ஊழியர் செல்வமணி மற்றும் கேசவன், மேலாளர் மோகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். போதை மறுவாழ்வு மையத்தின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் தலைமறைவாகி விட்டதால் அவர்களை வ்தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 12 பேரை மீட்டு அரசின் போதை மறுவாழ்வி மையத்தில் அனுமதித்துள்ளனர். தனியார் போதை மறுவாழ்வு மையம் மாநில மன நல அமைப்பிடம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *