கோவிந்தா..! கோவிந்தா..! தொடங்கியது சோளிங்கர் லட்சுமி நரசிம்மரின் பிறம்மோற்வ தேர்திருவிழா..

Chariot

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சோளிங்களூரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் சித்திரை பிறம்மோற்ச்சவதை முன்னிட்டு தேர்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக லட்சுமி நரசிம்மர் கோயில் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 750 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சித்திரை மாதம் பிறம்மோற்வ திருவிழா முன்னிட்டு கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதனிடையே இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்து வருகிறது.

இதனிடையே ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்ட தேரில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இத்தேர் விழாவானது 4 வீதிகளில் உலா வந்து மீண்டும் கோவிலை அடையும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாத சூழலில் தற்போது மீண்டும் நடைபெறுவதால் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர்.

மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டதால் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *