உஷார்! ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு..

சாலை விபத்துக்கள் என்பது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதனை தடுக்க தமிழக போக்குவரத்துக்கழக காவல்துறையினர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கடந்த ஐந்து மாதத்தில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 98 பேர் விபத்தில் உயிரிழந்தாத கூறினார்.

இந்நிலையில் போக்குவரத்து சாலை ஆக்கிரமிப்பு என்பது அதிகரித்துள்ளதால் இவ்வாறான விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது என கூறினார். இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.

அதோடு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது மட்டுமில்லாமல் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தார்.

மேலும், சென்னையை பொறுத்தவரையில் நேற்று மட்டும் 1278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து தலா 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *