டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட டிரைவர் பலி !!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வயலில் உழுது கொண்டிருக்கும் போது டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பட்டவர்த்தி என்ற கிராமத்தில் மதியழகன் என்பவர் டிராக்டர் கொண்டு உழவு ஓட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்கிவீசப்பட்ட மதியழகன் மீது டிராக்டரின் பின்புற டயர் ஏறி இறங்கியது.
இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மதியழகன் துடிதுடித்து இறந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், உழவு செய்வதற்காக டிராக்டர் ஓட்டயப்போது டயரில் ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.