10 ஆண்டுகளாக ஓயாத டார்ச்சர்..! அதிரவைக்கும் பகீர் பின்னணி?

கோவையில் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ததோடு பாலியல் தொல்லை கொடுத்த சிமெண்ட் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் மலர். 37-வயதான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்தார். பின்னர் பவானியில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த அவர் அங்குள்ள சிமெண்ட் மற்றும் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

பத்து வருடங்களுக்கு மேலாக அந்தக் கடையில் வேலை பார்த்து வந்த மலருக்கு கடையின் உரிமையாளரான நவநீதன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. ஆரம்பத்தில் இதனை கண்டித்த அவர் ஒரு கட்டத்தில் தன் முதலாளியின் செயலை வெளிப்படுத்தும் வகையில் கடையில் இருந்த படியே வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.

தனியே வசிக்கும் தன்னை ஒத்துழைக்க முயற்சி செய்வதோடு தன்னை கொலை செய்யப்பார்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பின்னால் இருந்த நவநீதன் கோபத்தில் மலரின் செல்போனை வாங்கியது மட்டுமில்லாமல் அவரை தாக்கியதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையில் இருக்கும் வீட்டில் வேலை இருப்பதாக நவநீதன் குடும்பத்தினர் கூறவே உதவிக்காக மலர் சென்றுள்ளார். திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தன் மகளின் இந்த நிலைமைக்கு நவநீதன் மற்றும் அவரின் குடும்பத்தார் காரணம் என மலரின் தந்தை குற்றச்சாட்டை முன்வைத்தார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், மலர் இன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் நவநீதன் மற்றும் அவரது மனைவியை வலைவீசி தேடிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *