ஒரே நாளில் மேலும் 2 தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு இந்தியா அனுமதி

தடுப்பு மருந்துகளின் அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தும் வகையில் மேலும் 2 தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோர்பிவேக்ஸ் மற்றும் கோவோவேக்ஸ் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒன்றியரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தடுப்பூசி பணிகளை மேலும் வேகப்படுத்தலாம்.கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் மால்னுபிரவிர் மருந்துக்கும் ஒன்றியரசு அனுமதி அளித்துள்ளது .மூன்று தடுப்பு மருந்துகளின் அவசர பயன்பாட்டிற்காக இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளது.

இதை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா  தனது ட்விட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *