ஆப்கானிஸ்தானில் கொடூரம் – குழந்தைகளை விற்று பட்டினியை போக்கும் மக்கள்
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்காவின் நேட்டோ படைகள் வெளியேறியவுடன், தாலிபான்கள் ஆட்சி பொறுப்பை கைப்பற்றினார். அவர்கள் ஆட்சி பொறுப்பை கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விளையெல்லாம் கடுமையாக அதிகரித்தது. மேலும் தாலிபான்களுடன் எந்த நாடும் நட்பு கொள்ள விரும்பாததால், ஆப்கானிஸ்தானிற்கு உதவ பெரும்பாலான நாடுகள் முன் வரவில்லை. இந்நிலையில் அங்கு பட்டினியாக வாழும் 23 பில்லியன் மக்களை காப்பாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான கோர்டன் பிரவுன் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் குளிர் ஒருபுறம் மக்களை வதைக்கிறது என்றால், பசியால் மக்கள் தவித்து வருகின்றனர்.மேலும், பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை விற்று மீதமிருக்கும் பிள்ளைகளின் பட்டினியை போக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், சிலர் தங்களது இளம்வயது பெண்பிள்ளைகளை தலிபான்களின் கொடுத்து பணம் வாங்கும் கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து உலக வங்கிகள், அந்நாட்டின் நிதி ஆதாரங்களை முடக்கி விட்டது.
எனவே, ஆப்கானிஸ்தானில் உள்ள சுகாதார பணியாளர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களை கருத்தில் வைத்து, முடக்கப்பட்டிருக்கும் நிதியை விடுவிக்க கோர்டன் பிரவுன் வலியுறுத்தியிருக்கிறார். இதன் மூலம், அந்நாட்டின் அரசால், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்று உலக நாடுகளிடம் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.