ஒலிமிக்சை காண சீனா செல்வாரா ஜோ பைடன்

அமெரிக்கா மற்றும் சீனாவுக்குமிடையே வர்த்தக ரீதியான பனி போர் சொல்லல் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்  சீன பிரதமர் ஜி ஜிங்பிங் உடன் நவம்பர் 15ம் தேதி அன்று காணொளி வாயிலாக பேசவுள்ளார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுமிடையேயுள்ள வர்த்தக சிக்கல்கள், மனித உரிமை விவகாரங்கள், ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சீனாவின் அணு ஆயுத குவிப்பை குறித்து ஜோ பைடேன் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சீன தரப்பிலிருந்து காலநிலை மாற்றம், கொரோனா பேரிடர் குறித்து ஆலோசிக்க உள்ளதாக ஏறிபார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகார தகவல் ஒன்று சீனா தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. அதில் “கோல்ப் விளையாட்டை போல இரு நாடுகளும் சிறப்பான செயல்பாடுகளை வெளி காட்டவே விரும்புவதாகவும் குத்துச் சண்டையை போல ஒருவரை ஒருவர் நாக் அவுட் செய்ய விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தது.இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அடுத்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்ஸை காண ஜோபிடனுக்கு ஜின்பிங் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *