அமெரிக்காவில் செல்லப்பிராணிகளை தேடும் தன்னார்வலர்கள்..!
அமெரிக்காவில் அண்மையில் காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீயானது மூன்று நாட்களுக்கு நீடித்தது. இந்தக் காட்டுத் தீயில் அந்தப் பகுதியில் வசிக்கும் பலரின் செல்லப் பிராணிகள் தீயில் சிக்கி பரிதாபாக உயிரிழந்தன.
தற்போது காட்டுத் தீ குறைந்து கடுமையானப் பனிப் பொழிவினை சந்தித்து வருகிறது அமெரிக்கா. இந்நிலையில், கடும் பனிப் பொழிவினையும் பொருட்படுத்தாமல் தன்னார்வலர்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் காட்டுத் தீயில் தொலைந்துபோன செல்லப்பிராணிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 30 அன்று ஏற்பட்ட காட்டுத்தீயில் இந்த செல்லப்பிராணிகள் தொலைந்து போனது குறிப்பிடத்தக்கது.