பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா? இலங்கை அரசியலில் பரபரப்பு..

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால்  இலங்கைமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பெரும்  பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதன் விளைவாக இலங்கை முழுவதும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக  வேண்டும் என இலங்கை அரசுக்கு எதிராக மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த  இலங்கை அரசு ஊரடங்கு மற்றும்  அவசர நிலை பிரகடனம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.இது பொதுமக்களுக்கு பாதிப்பை  உண்டாகும் செயல் என்று இலங்கை மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை  ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும்  பிரதமர் மகிந்த ராஜபக்சே  இடையில் நடந்த ஆலோசனையில் இந்த  முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. அதனை உறுதி செய்யும் வகையில் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கினார். 

ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டார்.மகிந்த ராஜபக்சேவை தொடர்ந்து  26 அமைச்சர்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டார். இதனால்  புதிய அமைச்சரவை விரைவில் அமைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *